என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பெரம்பலூர் கொலை
நீங்கள் தேடியது "பெரம்பலூர் கொலை"
பெரம்பலூர் அருகே பணத் தகராறில் மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து தம்பியை படுகொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நக்கச்சேலம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருக்கு ராமதாஸ் (வயது 38), கோவிந்தராஜ் (36) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக ஊரின் அருகே 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதனை அவரது தந்தை இருவருக்கும் பிரித்து கொடுத்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த அண்ணன், தம்பி இருவரும் பின்னர் ஊருக்கு வந்து அவர்களுக்குரிய நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். தற்போது கோடை காலம் என்பதால் கிணற்றில் போதிய தண்ணீர் இல்லை.
இதனால் இருவரும் நிலத்திற்கு பொதுவான இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தனர். அதற்கான பங்கு தொகை ரூ.60 ஆயிரம் பணத்தினை தருமாறு தம்பி கோவிந்தராஜிடம், ராமதாஸ் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜ் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு குடிபோதையில் ராமதாஸ், கோவிந்தராஜின் வீட்டிற்கு சென்று, ஆழ்துளை கிணறு அமைத்ததற்கான பணத்தை தருமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த கோவிந்தராஜூம் ராமதாசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ராமதாஸ், மது பாட்டிலை உடைத்து கோவிந்தராஜின் கழுத்தை அறுத்தார். இதில் கோவிந்த ராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த உறவினர்கள், ஊர் பொது மக்கள் அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாக பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உயிரிழந்த கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நக்கச்சேலம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருக்கு ராமதாஸ் (வயது 38), கோவிந்தராஜ் (36) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக ஊரின் அருகே 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதனை அவரது தந்தை இருவருக்கும் பிரித்து கொடுத்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த அண்ணன், தம்பி இருவரும் பின்னர் ஊருக்கு வந்து அவர்களுக்குரிய நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். தற்போது கோடை காலம் என்பதால் கிணற்றில் போதிய தண்ணீர் இல்லை.
இதனால் இருவரும் நிலத்திற்கு பொதுவான இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தனர். அதற்கான பங்கு தொகை ரூ.60 ஆயிரம் பணத்தினை தருமாறு தம்பி கோவிந்தராஜிடம், ராமதாஸ் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜ் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு குடிபோதையில் ராமதாஸ், கோவிந்தராஜின் வீட்டிற்கு சென்று, ஆழ்துளை கிணறு அமைத்ததற்கான பணத்தை தருமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த கோவிந்தராஜூம் ராமதாசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ராமதாஸ், மது பாட்டிலை உடைத்து கோவிந்தராஜின் கழுத்தை அறுத்தார். இதில் கோவிந்த ராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த உறவினர்கள், ஊர் பொது மக்கள் அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாக பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உயிரிழந்த கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X